Published : 05 Dec 2020 06:41 PM
Last Updated : 05 Dec 2020 06:41 PM

மாஸ்கோ: கரோனா தடுப்பு மருந்தை பொது மக்களுக்கு செலுத்தும் பணி தொடக்கம்

மாஸ்கோவில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியில் ரஷ்ய சுகாதார பணியாளர்கள் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து ரஷ்யாவின் கரோனா தடுப்பு பிரிவு தரப்பில், “ ஸ்புட்னிக் கரோன தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியை ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். இதற்கான மாஸ்கோவில் மட்டும் 70 சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமூக பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த வாரம் மிகப்பெரிய எண்ணிக்கையில் கரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x