Published : 05 Dec 2020 12:11 PM
Last Updated : 05 Dec 2020 12:11 PM

சீன நிலக்கரிச் சுரங்க விபத்து: 18 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 18 ஊழியர்கள் பலியாகினர்.

இதுகுறித்து சீனாவின் உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ சீனாவின் யோங்சான் நகரில் உள்ள நிலக்கரிச் சுரக்கத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதில் பணியாற்றிய ஊழியர்கள் 18 பேர் பலியாகினர்.

மேலும் அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துளனர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் பலர் பலியாகினர்.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

தேவையான பாதுகாப்பு அம்சங்களை நிலக்கரிச் சுரங்க நிறுவனங்கள் முறையாகக் கடைபிடிக்காததால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீனாவில் ஆண்டுதோறும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x