Published : 04 Dec 2020 09:18 PM
Last Updated : 04 Dec 2020 09:18 PM

அமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு

அமெரிக்காவில் இரண்டாவது நாளாகக் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ''நாட்டில் இரண்டாவது நாளாகக் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,800 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,83,030 ஆக உள்ளது.

டெக்சாஸ் மற்றும் நியூயார்க் மாகாணங்களில் கரோனா பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டெக்சாஸில் 22,729 பேரும், நியூயார்க்கில் 34,829 பேரும் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். மேலும், இதுவரை 1.4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபநாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x