Published : 04 Dec 2020 06:28 PM
Last Updated : 04 Dec 2020 06:28 PM

அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: ட்ரம்ப் சூசகம்

2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என்று ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்கள் இடையே ட்ரம்ப் இதுகுறித்துப் பேசும்போது, “கடந்த நான்கு ஆண்டுகள் அற்புதமாக இருந்தன. அடுத்த நான்கு வருடமும் நாங்கள் ஆட்சியில் இருக்க முயற்சி செய்வோம். இல்லையேல் 2024ஆம் ஆண்டில் சந்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

ஆனால், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தனது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், தேர்தலில் மோசடி செய்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாகத் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். தேர்தல் மோசடி குறித்து நீதிமன்றங்களில் ட்ரம்ப் வழக்கும் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x