Published : 03 Dec 2020 12:39 PM
Last Updated : 03 Dec 2020 12:39 PM

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு: ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை தரப்பில், ''நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிந்து வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,226 ஆக உள்ளது

கரோனா பலி எண்ணிக்கை 2,76,979 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு நேற்று மட்டும் 1,82,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1.4 கோடியாக அதிகரித்துள்ளது. டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x