Published : 02 Dec 2020 09:00 PM
Last Updated : 02 Dec 2020 09:00 PM

கரோனா தடுப்பு மருந்து அடுத்த வாரம் பொது மக்களுக்கு செலுத்தப்படும்: புதின்

அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பு மருந்து பொது மக்களுக்கு செலுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது,” அடுத்த வாரத்திற்குள் 20 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருத்துகள் செலுத்தப்பட வேண்டும். உலகிலேயே இதுதான் முதல் முறை.” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x