Published : 01 Dec 2020 08:25 PM
Last Updated : 01 Dec 2020 08:25 PM

இந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 136 பேர் பலியான நிலையில், கரோனா பலி எண்ணிக்கை 17,081 ஆக உள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,092 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,43,975 ஆக உள்ளது. மேலும், நேற்று மட்டும் 136 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 17,081 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,54,879 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x