Published : 01 Dec 2020 11:57 AM
Last Updated : 01 Dec 2020 11:57 AM

கொலம்பியாவில் அதிகரிக்கும் கரோனா

கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,16,806 அக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கொலம்பியா சுகாதாரத் துறை தரப்பில்,” கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொலம்பியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13, 16,806 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் நேற்று மட்டும் 182 பேர் பலியாக, கரோனாவுக்கு 36,766 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 12,10,489 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனா காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து சந்தைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அமெரிக்காவும், சீனாவும் அறிவித்துள்ளன.

உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x