Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

தீவிரவாதி குறித்து தகவல் தந்தால் ரூ.37 கோடி பரிசு; மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாக அமெரிக்க அரசு அறிவிப்பு

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் மிர்ருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சதித் திட்டம் தீட்டியது, அதை செயல்படுத்தியது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது என்று அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் இலியானிஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி சாஜித் மிர் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பு அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சாஜிர் மிர்ரை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் குறித்து அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவித்தால் ரூ.37 கோடி பரிசு வழங்கப்படும். 1-202-702-7843 என்ற எண்ணில் வாட்ஸ் அப், சிக்னல் அல்லது டெலிகிராம் வாயிலாக தகவல்களை தெரிவிக்கலாம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை புகைப்படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x