Published : 28 Nov 2020 08:32 PM
Last Updated : 28 Nov 2020 08:32 PM

ஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது

ஐரோப்பாவில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஐரோப்பாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,76,06,370 ஆக உள்ளது. மேலும் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பிரிட்டனில் 57,551 பேரும், இத்தாலியில் 53,677 பேரும் , ஸ்பெயினில் 44,668 பேரும் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x