Published : 28 Nov 2020 05:52 PM
Last Updated : 28 Nov 2020 05:52 PM
இந்தோனேசியாவில் புதிதாக 5,418 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டது. 125 பேர் பலியாகினர்.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,418 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இந்தோனேசியாவில் நேற்று 125 பேர் பலியாகி உள்ளனர்.இந்தோனேசியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,646 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவாவில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு ஈடுபட்டுள்ளது.
கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT