Published : 27 Nov 2020 09:24 PM
Last Updated : 27 Nov 2020 09:24 PM

கரோனா: ஈரானில் அரசு அலுவலங்கள் மூடல்

ஈரானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அங்கு பல முக்கிய அரசு அலுவலகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு தரப்பில், “ ஈரானில் மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14, 051 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 406 பேர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்கு ஈரானில் இதுவரை 9 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,095 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. சில ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x