Published : 27 Nov 2020 08:15 PM
Last Updated : 27 Nov 2020 08:15 PM
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 12,289 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 12, 289 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 337 பேர் பலியாகினர்.
ஸ்பெயினில் இதுவரை கரோனாவுக்கு 16,37,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு 44,037 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் மாட்ரிட் பகுதி தொடர்ந்து கரோனா பரவலின் மையமாக உள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT