Last Updated : 11 Oct, 2015 11:49 AM

 

Published : 11 Oct 2015 11:49 AM
Last Updated : 11 Oct 2015 11:49 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 3

மீண்டும் 2020 தேர்தலில் மொரேல்ஸ் போட்டியிடு வாரா? அரசியலமைப்புச் சட்டப்படி இப்போது இது முடியாது. ஆனால் அங்கு அவருக் குத் திரண்டிருக்கும் ஆதரவைப் பார்த்தால் அரசியலமைப்புச் சட்டத் தையே மாற்றி அமைத்துவிட்டு மீண்டும் அவர் தேர்தலுக்கு நிற்கலாம்.

தனக்கு ஏற்றபடி அரசியல மைப்புச் சட்டப்பிரிவை மொரேல்ஸ் சீக்கிரமே மாற்றி விடுவார் என்றுதான் தோன்றுகிறது. தேர்தல் முடிவின்படி 2020 வரை அவர் அதிபராக தொடரலாம். ஆனால் ஏதோ நிகழ்வின் காரணமாக பொதுத் தேர்தலை சீக்கிரமே அறிவிக்க வேண்டி வந்தால்? எதற்கு ரிஸ்க்?

மொரேல்ஸ் இன்னமும் பெரு வாரியான மக்கள் ஆதரவு பெற்ற வராகத்தான் இருக்கிறார். என்றா லும் அந்த ஆதரவின் அளவு முன்பைவிடக் குறைந்திருக்கிறது என்கிறார்கள். சரிந்திருக்கக்கூடிய தன் இமேஜை நிலைநிறுத்தும் வகை யிலும் 2020யிலும் தன் கட்சியே வெல்வதற்காகவும் இப்போதே ஒரு குழு அமைக்கப்பட்டு பணியாற்றத் தொடங்கிவிட்டது.

‘‘எனது கட்சியில் தகுந்த வேறு யாரையாவது அதிபர் வேட்பாள ராக நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்’’ என்று தன் கட்சிக்கு மொரேல்ஸ் உத்தரவிட, கட்சியினரோ ‘‘நாங்கள் கட்சிக்குள் சல்லடைபோட்டுத் தேடி விட்டோம். அதிபராகும் தகுதி மொரேல்ஸுக்கும் துணை அதிப ராகும் தகுதி (இப்போதும் அதே பதவியில் இருக்கும்) அல்வரோ லினராவுக்கும் மட்டும்தான் உள்ளது’’ என்கிறார்கள். பேசி வைத்துக் கொண்டு நடிக்கிறார் களோ என்று தோன்றினாலும் பொலி வியாவை பெரும்பாலும் சரியா கவே வழிநடத்துவதால் மொரேல் ஸுடன் போட்டியிட இப்போ தைக்கு அவர் கட்சியிலோ, எதிர்க் கட்சியிலோ பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் நிலவரம்.

‘‘மூன்றாம் முறையாக மொரேல்ஸ் அதிபரானதே சட்ட மீறல். அப்படியிருக்க நான்காம் முறையா? இதென்ன அராஜகம்? மொரேல்ஸ் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். அதிகார போதை அவரைவிட்டு நீங்க வில்லை’’ என்று கொந்தளிக் கிறார்கள் எதிர்க்கட்சியினர்.‘‘நான் காவது முறையும் அதிபராக முயற் சிப்பேன் என்று நான் சொல்ல வில்லையே’’ என்று மையமாக இதற்கு கருத்து தெரிவிக்கிறார் மொரேல்ஸ்.

மொரேல்ஸின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் பட்டது. எதிர்பாராத வகையில் வறுமையும் குறைந்து கொண்டு வருகிறது. பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் பொருளாதாரத்தில் முன் னேற்றம் காணாதபோது பொலி வியா விதிவிலக்காக இருக்கிறது.

பொலிவியாவை உதாரண மாகக் கொண்டோ என்னவோ ஈக்வேடார் நாட்டிலும் அரசியல மைப்புப் பிரிவை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேறெதற்கு? ஆட்சி யாளரின் அதிகபட்ச பதவிக் காலத்தை நீட்டிப்பதற்குதான். வெனிசுவேலாவில் ஏற்கெனவே அப்படி ஒரு முயற்சி நடை முறையாகிவிட்டது.

சில நடுநிலையாளர்கள் வேறொரு கவலையைத் தெரிவிக் கிறார்கள். ‘‘பிறந்தவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். மொரேல்ஸ் இறக்கும்போது பொலி வியாவில் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களே இருக்கமாட்டார்கள் மொரேல்ஸ் கட்சியில்கூட. இது பொலிவியாவுக்கு பெரும் பின்ன டைவைத் தரும்’’ என்கிறார்கள்.

பொலிவியாவின் அரசியல் மொரேல்ஸ் பதவி ஏற்பதற்கு முன்பு பலவித சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவித்தது. இவருக்கு முன்பு பதவியேற்ற ஐந்து அதிபர்களில் அத்தனை பேரும் மொத்தமாக நான்கே வருடங்களுக்குள் பதவி இழக்க நேரிட்டது.

ஆனால் மொரேல்ஸின் செயல் பாடுகள் கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. இவரது தற்போதைய ஆட்சிக் காலம் 2020-ல் தான் முடிவடைகிறது. அதற்குள்ளாக அங்குள்ள மக்களில் கணிசமானவர்கள் இதற்குக் கவலைப்படுகிறார்கள். சட்டப்படி இவரால் அடுத்த தேர்தலில் அதிபராக முடியாதே என்று தவிக்கிறார்கள்.

‘‘மக்களுக்கு எந்தவித அச்சமும் வேண்டாம். அவர்கள் தங்கள் எண் ணத்தை எழுத்துவடிவில் எங்களிடம் கொடுக்கலாம். ஜனநாயக முறையில் முடிவெ டுப்போம்’’ என்று கூறியிருக்கிறார் மொரேல்ஸ்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தங்கள் நாட்டுத் தலைவர் இருமுறைக்குமேல் அப்பதவியில் நீடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதே சமயம் வெனிசுவேலா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற பல நாடுகளில் ஒரே அதிபர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

அதிபர் ஆவதற்கு முன் ஈவோ மொரேல்ஸின் பின்னணி என்ன என்று கொஞ்சம் பார்ப்போமா?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x