Published : 25 Nov 2020 03:15 PM
Last Updated : 25 Nov 2020 03:15 PM

அமெரிக்காவில் கரோனா பலி 2,59,925  ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,146 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,146 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் 2,59,925 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே தினமும் 2,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று மட்டும் 1,72,935 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இதுவரை 1,25,91,163 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x