Published : 25 Nov 2020 12:12 PM
Last Updated : 25 Nov 2020 12:12 PM
அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,164 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்ஜெண்டினாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 164 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அrஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,81,795 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 311 பேர் பலியாக அர்ஜெண்டினாவில் 37,432 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை அர்ஜெண்டினாவில் 12,10,634 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனா தொற்றினால் அதிகப் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் பல நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT