Published : 24 Nov 2020 09:09 PM
Last Updated : 24 Nov 2020 09:09 PM

அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்

அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி பேசும் போது, “ ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பயனற்றது என்பதை நாடுகள் உணருவரை ஈரான் தனது எதிர்ப்பை தெரிவிக்கும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு பல வருடங்களாக முயற்சித்தோம். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. அமெரிக்கா எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுகிறது.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏவுகணைகளை வைத்திருக்கும்போது எங்களை வைத்திருக்க கூடாது என்கிறார்கள். அமெரிக்கா முதலில் தன்னை திருத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொன்றார். இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.

முன்னதாக, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x