Published : 24 Nov 2020 07:04 PM
Last Updated : 24 Nov 2020 07:04 PM

கரோனா: ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் 20 டாலருக்கு விற்பனை

கரோனாவுக்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் சுமார் 20 டாலருக்கு விற்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறும்போது, “ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தின் 2 டோசஸ் சர்வதேச மார்க்கெட்டில் 20 டாலருக்கு விற்பனை செய்யப்படும். மேலும், எங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள இந்தியா, பிரேசில், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x