இரட்டை கோபுர தாக்குதலில் புஷ்ஷுக்கு தொடர்பு: டோனால்ட் ட்ரம்ப்

இரட்டை கோபுர தாக்குதலில் புஷ்ஷுக்கு தொடர்பு: டோனால்ட் ட்ரம்ப்
Updated on
1 min read

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் கூறினார்.

2016ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனை விவரிக்குமாறு செய்தியாளர் கேட்டபோது, அப்போதைய அதிபர் அவர் தான். அதில் நிச்சயம் அவர் சம்மந்தப்பட்டுள்ளார் என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்புடன் அதேக் கட்சியைச் சேர்ந்த ஜெப் புஷ் (62) போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனுமாவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in