Published : 21 Nov 2020 06:36 PM
Last Updated : 21 Nov 2020 06:36 PM

தென் கொரியாவில் அதிகரிக்கும் கரோனா

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,403 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா சுகாதாரத் துறை தரப்பில், “ தென்கொரியாவில் 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,403 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தென்கொரியாவில் இதுவரை 503 பேர் பலியாகி உள்ளனர். தென்கொரிய தலை நகர் சியோலில் கடந்த சில வாரங்களாக கரோனா அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசன், டேஜியான், அசான் ஆகிய நகரங்களிலும் கரோனா அதிகரித்து வருகிறது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.

உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x