Published : 21 Nov 2020 05:10 PM
Last Updated : 21 Nov 2020 05:10 PM

ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதல்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளளது.

இத்தாக்குதலை தலிபான்கள் நடத்தி உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x