Published : 21 Nov 2020 12:24 PM
Last Updated : 21 Nov 2020 12:24 PM

பிரான்ஸில் கரோனா பலி 48,265 ஆக அதிகரிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கரோனாவுக்கு பலியாகினர். பிரான்ஸில் இதுவரை 48,265 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,”பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவுக்கு பிரான்ஸில் பலியானவர்கள் எண்ணிக்கை 48,265 ஆக உள்ளது.பிரான்ஸில் நேற்று மட்டும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.

சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x