Published : 20 Nov 2020 09:20 PM
Last Updated : 20 Nov 2020 09:20 PM

ஹாங்காங்கில் கரோனா; தீவிரம்: அவசர நடவடிக்கையில் இறங்குகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

ஹாங்காங்கில் கரோனாவின் நான்காவது அலை தொடங்கி இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹாங்காங் ஊடகங்கள் தரப்பில், “ ஹாங்காங்கில் கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. ஹாங்காங்கில் கரோனா பரவலின் நான்காவது அலை தொடங்க உள்ளது. ஹாங்காங்கில் உள்ள பல மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே ஹாங்காங்கில் மூன்றிலக்க எண்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளும் மூடப்பட்டன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x