Published : 20 Nov 2020 08:36 PM
Last Updated : 20 Nov 2020 08:36 PM

கனடாவில் கரோனா பாதிப்பு 3,14,111 ஆக அதிகரிப்பு

கனடாவில் கரோனா பாதிப்பு 3,14,111 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கனடா சுகாதாரத் துறை தரப்பில், “ கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,210 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரமாக கனடாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சுமார் 3,14,111 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,256 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கனடாவில் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 -ம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x