Published : 20 Nov 2020 01:56 PM
Last Updated : 20 Nov 2020 01:56 PM

தென்கொரியாவில் கரோனா பாதிப்பு 30,017 ஆக அதிகரிப்பு

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 363 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 363 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சியோலில் கடந்த சில நாட்களாகக் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் இதுவரை 30,017 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் 1.67% ஆக உள்ளது, மேலும், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 87.49% ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.

உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x