Published : 17 Nov 2020 03:19 PM
Last Updated : 17 Nov 2020 03:19 PM

அரசு விதிக்கு மாறாக கரோனா செய்தி; வூஹான் பெண் பத்திரிகையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

சீனாவில் வூஹான் நகரில், அரசு விதிக்கு மாறாக கரோனா வைரஸ் குறித்துச் செய்திகளை வெளியிட்ட முன்னாள் வழக்கறிஞர், பத்திரிகையாளருக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், “வூஹானில் கரோனா வைரஸ் குறித்துச் செய்திகளை வெளியிட்ட முன்னாள் வழக்கறிஞரும், பத்திரிகையாளருமான சாங் சான் என்ற பெண் மே மாதம் கைது செய்யப்பட்டார். சர்ச்சையைத் தூண்டும் வகையில், அரசு விதிகளுக்கு மாறாகச் செய்திகளை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அரசு விதிக்கு மாறாக கரோனா குறித்துச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் மாயமானதாக சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x