Published : 16 Nov 2020 01:05 PM
Last Updated : 16 Nov 2020 01:05 PM

பிரேசிலில் கரோனா பலி 1,60,000-ஐ நெருங்கியது

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,65,798 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,65,798 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் பிரேசிலில் 14,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட, மொத்த தொற்று எண்ணிக்கை 58 லட்சமாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் முக்கிய நகரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் விரைவில் நிரம்பலாம் என்று தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இந்த நிலையில் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக மருத்துவப் பரிசோதனைகளை பிரேசில் நிறுத்தி வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x