Published : 15 Nov 2020 09:12 PM
Last Updated : 15 Nov 2020 09:12 PM

ஜெர்மனியில் கரோனா கட்டுப்பாடுகள் சில மாதங்களுக்கு நீடிக்கும்: அரசு விளக்கம்

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் மேலும் சில மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை தரப்பில், “ ஜெர்மனியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க தேவை இருக்கிறது. குறைந்தது 5 மாதங்களுக்காவது கரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜெர்மனி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x