Published : 15 Nov 2020 01:45 PM
Last Updated : 15 Nov 2020 01:45 PM

நியூசிலாந்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா

நியூசிலாந்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ நியூசிலாந்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ரோமனியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை 1,643 பேருக்கு கரோனா தொற்ரு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது 53 பேர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளனர். மீதியுள்ள அனைவரும் குணமடைந்துள்ளனர் என்றும் நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனாவைத் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x