Published : 13 Nov 2020 03:23 PM
Last Updated : 13 Nov 2020 03:23 PM

பிரான்ஸில் அடுத்த 15 நாட்களுக்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

பிரான்ஸில் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்களுக்குத் தீவிரமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் கூறும்போது, “பிரான்ஸில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. இதனால் டிசம்பர் மாதம்வரை கரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும். குறைந்தது அடுத்த 15-வது நாள்வரை கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 33,172 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x