Published : 11 Nov 2020 08:09 PM
Last Updated : 11 Nov 2020 08:09 PM

ரஷ்யாவில் கரோனா பலி 31,593 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பலியானவர்கள் எண்னிக்கை 31,593 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்கள் 31,593 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 19,851 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 18,36,960 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x