இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கரோனா

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,770 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,48,118 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,770 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,48,118 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,78,982 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 14,836 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாவாவில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு ஈடுபட்டுள்ளது.

கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானவர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in