ரஷ்ய கரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்: 92 சதவீதம் பயனளிப்பதாக தகவல்

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்: 92 சதவீதம் பயனளிப்பதாக தகவல்
Updated on
1 min read

ரஷ்யாவின் கரோனா த்டுப்பு மருந்தான ஸ்புட்னிக் 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய மருத்துவக் குழு தரப்பில் ”ரஷ்யாவில் கரோனா தடுப்பூசி மருத்து ஸ்புட்னிக் - 5 பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 92% பயனுள்ளதாக இருப்பதாக இறுதி மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையில் 16,000 பேர் உட்படுத்தப்பட்டனர்.மொத்தமாக இக்கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் 40,000 பேர் உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் சில நாட்களாகக் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in