நேபாள பெருவெள்ளம்: 2 மாவட்டங்களில் 600 சிறுவர்கள் மாயம்

நேபாள பெருவெள்ளம்: 2 மாவட்டங்களில் 600 சிறுவர்கள் மாயம்
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்ட ரசுவா மற்​றும் நுவாகோட் மாவட்​டங்​களில் 600-க்​கும் மேற்​பட்ட சிறுவர்கள் மாய​மாகி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​தில் நேற்று 10-வது நாளாக மீட்பு பணி​கள் தொடர்ந்​தன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் இருந்து கொத்து கொத்​தாக உடல்​கள் மீட்​கப்​பட்டு வரு​கின்​றன. பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து இது​வரை 1,280 உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும், காயங்​களு​டன் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்ட 2 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் பலி எண்​ணிக்கை 1,282 ஆக உயர்ந்​துள்​ளது.

மேலும், பல்​வேறு பகு​தி​களி​லும் வெளி​நாட்​டினர் உள்பட 4,798 பேர் மாய​மாகி உள்​ளனர். இந்​நிலை​யில், பெரு​வெள்​ளத்​தால் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்ட ரசுவா மற்​றும் நுவாகோட் மாவட்​டங்​களில் 600-க்​கும் மேற்​பட்ட சிறு​வர்​கள் மாய​மாகி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

உள்​ளூர் கல்வி மேம்​பாட்டு மற்​றும் ஒருங்​கிணைப்பு பிரிவு​கள், உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​கள் தொகுத்த தகவல்​களை மேற்​கோள் காட்டி காத்​மாண்டு போஸ்ட் நாளிதழ் செய்தி வெளி​யிட்​டுள்​ளது. அதில், நுவாகோட் மாவட்​டத்​தில் 300 முதல் 350 சிறு​வர்​களும் ரசுவா மாவட்​டத்​தில் சுமார் 280 சிறு​வர்​களும் மாய​மாகி​யுள்​ளனர் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பேரிடர் ஆசிரியர்​கள் மற்​றும் பள்ளி ஊழியர்​களை​யும் கடுமை​யாக பாதித்​துள்​ளது. இரு மாவட்​டங்​களி​லும் சேர்த்து 22 ஆசிரியர்​கள் மற்​றும் பள்ளி ஊழியர்​கள் காணா​மல் போயுள்​ள​தாக கல்வி அதி​காரி​கள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். ரசுவா மாவட்​டத்​தில் அரசு பள்​ளி​களைச் சேர்ந்த 15 பேர், தனி​யார் பள்​ளியைச் சேர்ந்த ஒரு​வர் என 16 ஆசிரியர்​களும், நுவாகோட்​டில் 6 ஆசிரியர்களும் மாய​மாகி​யுள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்கின்றன.

நேபாள பெருவெள்ளம்: 2 மாவட்டங்களில் 600 சிறுவர்கள் மாயம்
ராகுல் காந்தியின் 2029 கனவு: இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் சவால்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in