Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

பென்சில்வேனியா, நவேடாவில் வெற்றி பெற்று பெரும்பான்மையை எட்டினார்; அமெரிக்காவின் 46-வது அதிபர் ஜோ பைடன்: முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்; ஜனவரி 6-ல் நாடாளுமன்றம் கூடுகிறது

பென்சில்வேனியா, நவேடா மாகாணங்களை கைப்பற்றிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக் காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட் பாளராக தற்போதைய துணை அதி பர் மைக் பென்ஸ் முன்நிறுத் தப்பட்டார்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை அதிபர் வேட் பாளராக சென்னையை பூர்வீக மாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்கு கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

அமெரிக்காவில் அதிபர் வேட் பாளருக்கு மக்கள் நேரடியாக வாக் களிப்பது இல்லை. அதற்கு பதிலாக 'எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர்குழு) உறுப்பினர்களுக்கு வாக் களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்கு களை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

கடந்த 3 நாட்களாக தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. பெரும்பான்மையான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்த நிலையில் ஜோ பைடனுக்கு 264 வாக்குகளும், அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு 214 வாக்குகளும் கிடைத்திருந்தன.

ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, அரிசோனா, நார்த் கரோ லினா ஆகிய 5 மாகாணங்களின் முடிவுகளில் இழுபறி நீடித்தது. அந்த மாகாணங்களில் வாக்குகள் மிகவும் பொறுமையாக எண்ணப் பட்டன. ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வருகிறது.

இந்த பின்னணியில் பென் சில்வேனியா, நவேடா மாகாணங் களை நேற்றிரவு ஜோ பைடன் கைப்பற்றினார். பென்சில்வேனியா வின் 20 வாக்குகள், நவேடாவின் 6 வாக்குகளும் பைடனுக்கு கிடைத்தது. இதன்மூலம் அவர் 290 வாக்குகளை பெற்றார். பெரும் பான்மையை எட்டிய அவர் அமெ ரிக்காவின் 46-வது அதிபராக பதவி யேற்க உள்ளார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி யேற்கிறார்.

வரும் டிசம்பர் 14-ம் தேதி வாக்காளர் குழு தனது வாக்கினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய் யும். அதன் அடிப்படையில் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பார்கள்.

தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்தல் முடிவு களை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.

கடந்த 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஸ்கர்டன் நகரில் ஜோ பைடன் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பைடன், பழைய கார்களை வாங்கி விற்று வந்தார். தாய் கேத்தரின் ஜுன், அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

குடும்பத்தின் மூத்த மகனான ஜோ பைடன், ஒரு தங்கை, 2 தம்பிகளுடன் நடுத்தர குடும்ப பின்னணியில் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் மிகவும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். கடந்த 1965-ல் வரலாறு, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். 1968-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரின் சட்ட ஆலோ சகராக பணியைத் தொடங்கிய பைடன், 1970-ல் ஐனநாயக கட்சியில் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 1972-ம் ஆண்டில் டெலவர் செனட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 29 வயது. மிக இளம்வயதில் செனட் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 எம்.பி.க்களில் பைடனும் ஒருவர்.

கடந்த 1966-ம் ஆண்டில் நீலியா ஹண்டரை, ஜோ பைடன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் பிறந்தனர். 1972 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் அவரது மனைவி நீலியா ஹண்டரும் மகள் நவோமியும் உயிரிழந்தனர். 2 மகன்கள் படுகாயங் களுடன் உயர் தப்பினர். மகன்களை கவனித்துக் கொள்வதற்காக செனட் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் ஆலோசனையால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். அதன்பின், 1977-ம் ஆண்டில் மருத்துவர் ஜில் ஜேக்கபை, பைடன் 2-வது திருமணம் செய்தார். அவருக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 6 முறை செனட் அவைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார்.

மூத்த மகன் மரணம்

ஜோ பைடனின் மூத்த மகன் பவ் பைடன், ராணுவத்தில் இணைந்து இராக் போரில் பங்கேற்றார். 2015-ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக பவ் பைடன் உயிரிழந்தார். இதுவும் ஜோ பைடனின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூத்த மகனின் மறைவுக்கு பிறகு அரசி யலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டினார்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலை வரான அவர், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது. இந்திய, ஆப் பிரிக்க வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பைடன் தேர்வு செய்தார். கமலா வின் பூர்வீகம் குறித்து பைடன் பலமுறை பெரு மிதத்துடன் குறிப் பிட்டிருக்கிறார்.

டெலவரில் உள்ள ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் துணை அதிபராக அவர் பதவி வகித்த போது இந்திய வம்சாவளி அதிகாரி களே அவருடன் இணைந்து பணியாற்றினர். இதை அவரே பெருமையாக கூறியுள்ளார்.

‘‘அமெரிக்க அதிபராக பதவி யேற்ற பிறகு கரோனா வைரஸ், பொருளாதார மீட்பு நடவடிக்கை களில் கவனம் செலுத்துவேன். அமெரிக்கர்களை ஒன்றுபடுத்து வேன்" என்று பைடன் அறிவித் திருப்பது அமெரிக்கர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x