Published : 07 Nov 2020 09:47 PM
Last Updated : 07 Nov 2020 09:47 PM

தேர்தல் இன்னும் முடிவு பெறவில்லை: ட்ரம்ப் பிரச்சார குழு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் இன்னும் முடிவு பெறவில்லை என்று ட்ரம்ப் தேர்தல் பிரச்சார குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் பிரச்சார குழு கூறும்போது, “ தேர்தல் இன்னும் முடிவு பெறவில்லை. ஜோ பைடனின் வெற்றி நான்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 59-வது அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிட்டனர்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் மோசடி நடதுள்ளதாகவும் இதனைச் சட்ட ரீதியாகத் தான எதிர்கொள்ள இருப்பதாகவும், சட்ட பூர்வமான வாக்குகள் மூலம் அமெரிக்க அதிபராவேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x