Published : 06 Nov 2020 09:14 PM
Last Updated : 06 Nov 2020 09:14 PM

உலகம் முழுவதும் கரோனா தொற்று 5 கோடியை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குகிறது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “உலகம் முழுவதும் 4,92,53,080 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.12,42,750 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3,51,06,637 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட்டக் கரோனா அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்டக் கரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகக் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 2,41,026 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,25,029 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,61,779 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4.9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x