Published : 05 Nov 2020 09:22 PM
Last Updated : 05 Nov 2020 09:22 PM

போலந்தில் அதிகரிக்கும் கரோனா

போலந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,143 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போலந்து சுகாதாரத் துறை தரப்பில் “ போலந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,143 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,66,600 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x