Published : 04 Nov 2020 08:31 PM
Last Updated : 04 Nov 2020 08:31 PM

பாகிஸ்தானில் கரோனா பலி 7,000-ஐ நெருங்குகிறது

பாகிஸ்தானில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,867 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 3,37,573 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,16,060 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x