துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு; 994 பேர் காயம்

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு; 994 பேர் காயம்
Updated on
1 min read

துருக்கி நிலநடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து துருக்கி மீட்புப் பணி பேரிடர் மேலாண்மை கூறும்போது, “துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 994 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்மிர் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவாகி உள்ளது.

முன்னதாக, துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.

ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும். துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலையும் தாக்கின.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. கார்கள் உட்பட பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.

துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. அங்கும் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in