Published : 31 Oct 2020 08:07 PM
Last Updated : 31 Oct 2020 08:07 PM

ஆப்கானிஸ்தானில் மோதல்: தலிபான்கள் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 19 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 19 தலிபான்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 தலிபான்கள் பலியாகினர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே சில நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x