Published : 30 Oct 2020 06:35 PM
Last Updated : 30 Oct 2020 06:35 PM

மலேசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

மலேசியாவில் புதிதாக 799 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 799 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,889 ஆக அதிகரித்துள்ளது. 20,248 பேர் குணமடைந்துள்ளனர். 249 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மலேசியாவில் சமூகத் தொற்று பரவி வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் நுழைய டிசம்பர் மாதம் வரை தடை விதிக்கப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x