Published : 30 Oct 2020 03:57 PM
Last Updated : 30 Oct 2020 03:57 PM

இராக்கில் கரோனா பாதிப்பு 4,67,755 ஆக அதிகரிப்பு

இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 3,804 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இராக்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,67,755 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இராக் சுகாதாரத் துறை தரப்பில், “ இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,804 ஆக உள்ளது. தற்போது இராக்கில் கரோனாவுக்கு 4,67,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரோனாவில் இருந்து 3,94,386 பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனாவை கட்டுப்படுத்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று இராக் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்றும் இராக் அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x