Published : 29 Oct 2020 04:15 PM
Last Updated : 29 Oct 2020 04:15 PM
ஸ்பெயினில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நான்கு மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஸ்பெயின் மாகாண துறை அதிகாரிகள் தரப்பில், “ ஸ்பெயினில் சமீப நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அண்டாலிசியா, கேஸ்டில், லெயோன் முர்சியா ஆகிய மாகாணங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நான்கு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கல்வி,மருத்துவம் தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கடந்த வாரம் மட்டும் 1,70.000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் பகுதி தொடர்ந்து கரோனா பரவலின் மையமாக உள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT