Published : 27 Oct 2020 06:55 PM
Last Updated : 27 Oct 2020 06:55 PM

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடக்கூடாது: உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகள் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “உலக நாடுகள் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடக் கூடாது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். பிரேசிலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x