Published : 31 Oct 2015 08:23 AM
Last Updated : 31 Oct 2015 08:23 AM
உலகிலேயே அதிக காச (டியூபர் குலோசிஸ்) நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ் வதாக ஓர் அறிக்கை கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பு (டபிள் யூஎச்ஓ) ‘சர்வதேச டிபி அறிக்கை 2015’-ஐ வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1.4 லட்சம் குழந்தைகள் உட்பட 15 லட்சம் பேர் காச நோய்க்கு பலியாகி உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் உயிர்க்கொல்லி நோய்கள் பட்டியலில் எச்ஐவி-க்கு அடுத்த இடத்தை காசநோய் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் புதிதாக 96 லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 23 சதவீத நோயாளிகளுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT