Published : 26 Oct 2020 09:14 PM
Last Updated : 26 Oct 2020 09:14 PM

ஈரானில் 5,74,856 பேர் கரோனாவால் பாதிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 337 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் , “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 5, 960 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 337 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் இதுவரை 5,74,856 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,953 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x