Published : 26 Oct 2020 06:01 PM
Last Updated : 26 Oct 2020 06:01 PM
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும் என்று லண்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனின் தி சன் செய்தித்தாள் தரப்பில், “லண்டனின் புகழ்மிக்க மருத்துவமனை ஒன்றின் முக்கிய ஊழியர், ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து நவம்பர் மாதம் தயாராகிவிடும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்தில் தடுப்பு மருந்து கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்களுக்கு நடத்தி வருகின்றன.
இதில் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அதன் முடிவுகள் நல்ல செய்தியாகவே உள்ளன என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT