Published : 26 Oct 2020 03:54 PM
Last Updated : 26 Oct 2020 03:54 PM

சீனாவின் காஷ்கர் நகரில் அதிகரிக்கும் கரோனா

சீனாவின் காஷ்கர் நகரில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 100க்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதாரத் துறை தரப்பில், “ சீனாவில் ஜூன் மாதத்திலிருந்தே கரோனா பரவல் மீண்டும் தொடங்கியது. கரோனா தொற்றால் பெய்ஜிங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவின் காஷ்கர் நகரில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கஷ்கர் நகரில் முதலில் இளம் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடந்து அங்கு கரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 20 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 91,621 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x