ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 9 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கானி நகரில் உள்ள சாலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். மேலும், ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனத்திலும் குண்டு வெடித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே சில நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in